என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தல்-அரசு ஊழியர் மீது வழக்கு
- கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தப்பட்டது.
- அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது25). இவர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சீனுவுக்கும், எனக்கும் கடந்த 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 23 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொ ருட்கள் ெகாடுக்கப்பட்ன.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக சீனுவின் பெற்றோர் செல்லதுரை-மகாராணி ஆகியோர் துன்புறுத்துகின்றனர். இதனை கணவர் கண்டு கொள்வதில்லை. மேலும் மாமனார் தவறான உள்நோக்கத்துடன் நடக்க முயல்கின்றார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீனு, அவரது பெற்றோர் ஆகிய 3 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்