search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு
    X

    மத்திய அரசு பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு

    • மத்திய அரசு பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
    • விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ெஜயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 7ஆயிரத்து500 பணிக்காலி இடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3.5.2023 ஆகும்.

    இந்த தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை(24-ந்தேதி) முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

    போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதலாம்.

    இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-293613 அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பை விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×