search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
    X

    கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர்.
    • உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி கோவில் அருகே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், ராஜமுத்து, ராஜேந்திரன் உட்பட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு 36 உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ரோஸ்மில்க்கில் அதிக கலர் சேர்த்த 7 லிட்டர் ரோஸ் மில்க், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள் 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி குருனை 3 கிலோ, பேக்கிங் செய்யப்படாத, தேதி இல்லாத பால்கோவா பாக்கெட்டுகள் 15 கிலோ, தெர்மாகோல் கப் 100 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத 10 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.


    Next Story
    ×