search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் விழுந்த புள்ளிமானை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
    X

    கிணற்றில் விழுந்த மானை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

    கிணற்றில் விழுந்த புள்ளிமானை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    • தெரு நாய்கள் விரட்டியதால் புள்ளிமானை கிணற்றில் விழுந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    பாளையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகபுரம் கிராமத்தில் இன்று காலை தண்ணீர் தேடி புள்ளிமான் வந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டியது. இதில் பயந்த அந்த மான் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை பாது காப்பாக உயிருடன் மீட்டனர்.

    பின்னர் மான் வனத்துறை அதிகாரி களிடம் ஒப்படை க்கப்பட்டது. கிணற்றுக்குள் புள்ளிமான் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியது

    Next Story
    ×