search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பன்றிகளால் விவசாயிகள் கவலை
    X

    பன்றிகள் சேதப்படுத்திய நெற்பயிர்களை காட்டும் விவசாயி.

    பன்றிகளால் விவசாயிகள் கவலை

    • நெற்பயிர்களை சேதப்படுத்தும்பன்றிகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில்அய்யா சாமி என்பவரது விவசாய நிலத்தை பூபதி என்பவர் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். அப்பகுதியில் வளர்க்க ப்படும் வளர்ப்பு பன்றி கள் அடிக்கடி விவ சாய நிலத்திற்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்ப டுத்துவதாக விவசாயிகள் கவலைபடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

    இந்த நிலையில் வயலுக்குள் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பன்றி களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×