என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை
- அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
அங்கிருந்து வெளியேறிய கொள்ளை கும்பல் பக்கத்தில் பூட்டிக்கிடந்த சித்ரா தங்கராஜ் என்பவரது வீட்டின் கதவையும் உடைத்து அங்கும் கொள்ளையடித்துச் சென்றது.
இதேபோல் அருகில் உள்ள நேரு தெருவில் பூட்டியிருந்த வீட்டிலும் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது. இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனே பாண்டியன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வெளியூர் சென்ற நபர்கள் வந்த பின்பு தான் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






