search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
    X

    தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

    • தி.மு.க. கவுன்சிலர் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் பணப்பாண்டி (வயது 43). தி.மு.க. நிர்வாகி யான இவர் விருதுநகர் நகராட்சியில் 35-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உறவினர் கைது

    சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது அதே பகுதியில் வசிக்கும் கவுன்சிலர் பணப்பாண்டியின் உறவினர் காளீஸ்குமார் (38) என தெரியவந்தது. தேர்தல் பிரச்சினையில் காளீஸ் குமார் இதில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×