என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு கட்டாய திருமணம்
- மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த வாலிபரை விசாரித்து வருகின்றனர்.
- சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், சிவகாசியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாணவி மற்றும் சாமுவேலுக்கு திருச்செந்தூரில் திருமணம் நடந்தது. இதற்கு மாணவியின் பெற்றோர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சாமுவேல் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் மாணவியை அவரது வீட்டில் விட்டு சென்று விட்டார். சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நல விரிவாக்க நல அலுவலர் ராஜேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






