search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டிலுக்கு விலை உயர்த்தி ஆண்கள் மூலம் ஐந்து மடங்கு திரும்ப பெரும் அரசு தி.மு.க. அரசு
    X

    ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியபோது எடுத்தபடம்.

    மது பாட்டிலுக்கு விலை உயர்த்தி ஆண்கள் மூலம் ஐந்து மடங்கு திரும்ப பெரும் அரசு தி.மு.க. அரசு

    • மது பாட்டிலுக்கு விலை உயர்த்தி ஆண்கள் மூலம் ஐந்து மடங்கு திரும்ப பெரும் அரசு தி.மு.க. அரசு.
    • ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன் விழா மைதானத்தில் அ.தி. மு.க. பொதுசெயலாள ரும், முன்னாள் முதலமைச்சரு மான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுக்கு இணங்க விருது நகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராஜபாளை யம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான ராஜேந்திரன், தலை மைக்கழக பேச்சாளர் பேரா வூரணி திலீபன் பேசினர். இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசி யதாவது:-

    ராஜபாளையம் நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதிகள், தற்போது நடைபெற்று வருகின்ற நான்கு வழிச்சாலை உள் ளிட்ட அனைத்து பணிகளுக் கும் நான் தான் அடிக்கல் நாட்டினேன். தற்போது இவர்கள் பார்வையிட்டு கமிஷன் மட்டும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பாட்டு பாடி பெயர் வாங்க வேண்டும். இவர்கள் குற்றம் கண்டு பேர் வாங்கிட நினைக்கிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத் தில் ஏழை, எளிய மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. அரசால் வழங்கப்படும் மகளிர் உரி மைத்தொகை என்ற பெய ரில் 40 சதவீதம் பேருக்கு தான் பணம் வழங்கப் பட்டு வருகிறது. அதிலும் பிரச் சினை ஏற்பட்டுள்ளது.

    ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு மதுபானத்திற்கு 30 ரூபாய் விலை ஏற்றியுள்ள னர். இதனால் ஆண்கள் குடிப்பதற்கு வழி செய்து விட்டு நயவஞ்சகமாக அதில் ஐந்து மடங்கு வருவாயை தி.மு.க. அரசு ஈட்டி வருகி றது. மின் கட்டண உயர்வால் ராஜபாளையத்தில் பல நூற் பாலைகள் மூடப்பட்டு வரு கின்றன.இந்த நிலை மாற வேண் டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். யார் பிரதமர் என எடப்பாடி தீர்மானிக்க வேண்டும், இல்லை எடப்பாடி பிரதம ராக வேண்டும்.

    இவ்வாறு அவர் ேபசி னார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செய லாளர் எஸ்.என்.பாபுராஜ், தெற்கு நகர செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலா ளர்கள் ஆர்.எம்.குருசாமி (வடக்கு), நவரத்தினம் (தெற்கு), மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தார் ஒன்றிய செயலாளர் மயில் சாமி, மாவட்ட அரசு போக் குவரத்து சங்க கெளரவ தலைவர் குருசாமி,

    மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், செட்டியார்பட்டி அங்கு துரைபாண்டியன், மகளிரணி ராணி கவிதா, விமலா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகா புரியான், மாவட்ட பேரவை துணை தலைவர் திருப்பதி, துணை செயலாளர் ராசா, உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செய லாளர்கள் சோலைமலை, யோகசேகரன் நன்றி கூறினர். கூட்ட ஏற்பாடு களை ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் சிறப்பாக செய்திருந்தார்.

    Next Story
    ×