என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பாராட்டு விழா
- மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான தற்காப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தாளாளர் தி வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். ஊக்க பேச்சாளர் வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி யில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி காமினி, மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ஸ்ரீ, மாநில அளவிலான சுருள்வாள் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவன் கவிபாலராஜன் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
துணை நிர்வாக முதல்வர் பானுப்பிரியா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா நன்றி கூறினார்.
Next Story






