என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா ஆலோசனைக்கூட்டம்
- ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- 4 ரத வீதிகளும் போக்குவரத்திற்கு வசதியாக பளிச்சென காணப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி தேரோட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர்கள், ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் வரை மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி, காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, மின் வாரியம், மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 4 ரத வீதிகளிலும் கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தன்டோரா மூலம் கடைக்காரர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் 4 ரதவீதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கடைக்காரர்களும் இன்று தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்றினர். இதனால் 4 ரத வீதிகளும் போக்கு வரத்திற்கு வசதியாக பளிச்சென காணப்பட்டது.
இதனைகண்ட பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது இதுபோல் கடும் நடவடிக்கை எடுத்தால் 4 ரதவீதிகளிலும் இது போல் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் வைத்திருக்கலாம் என்றும், இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் நெடுஞ்சாலைத்துறையில் இருந்து அனைத்து கடை களுக்கும் நோட்டீசு வழங்கி அவர்களை ஆக்கிரமிப்பு செய்ய விடாமல் பாதுகாத்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்