என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுகுடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
- மதுகுடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள ஆசிலாபுரத்தை சேர்ந்தவர் முத்துசெல்வகுமார் (வயது36). இவர் தினமும் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி சாந்தி கண்டித்துள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்து செல்வகுமார் தனது தாய்க்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு சேலையில் தூக்குப்போட்ட நிலையில் முத்து செல்வகுமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சாந்தி, தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






