search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • இளம்பெண் மாயமானார்.
    • இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ஆலங்குளம் அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது 2-வது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக லட்சுமணன் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லட்சுமணன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது மகளை கண்மாய் சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் திருமணத்துக்கு பெண் கேட்டு வந்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனவே மகள் மாயமானதில் அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் மாந்தோப்பைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி அயன்ரெட்டியபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். மல்லாங்கிணறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×