search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    • நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயில்பட்டி

    சிவகாசி அருகே உள்ள கீழதாயில்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 23). தாயில்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மோகன்ராஜ்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் தாயில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    கொங்கலாபுரம் விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த வேன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் மோகன்ராஜ், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×