search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைச்சலில் சக்கை போடு போடும் தனியார் ரக சோளம்
    X

    விளைச்சலில் சக்கை போடு போடும் தனியார் ரக சோளம்

    • ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் தனியார் ரக சோளம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • இந்த சோளம் 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டு ரக சோளம் விளைவிக்கப்பட்டுள்ளது. தனியார் ரகமான இது 5 சதவீதம் வரை ஒட்டு ரகத்தையும், மீதி நாட்டு ரகமான சோளத்தையும் கொண்டுள்ளது.

    சித்திரைப் பட்டத்தில் விதைக்கப்படும் இந்த சோளம் 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

    அறுவடையின் போது கிலோ ரூ.35 வரை விலை போகும். குறைந்தது ஹெக்டேர் ஒன்றுக்கு 4 1/2 டன் சோளம் கிடைக்கும்.

    நிலத்தை தரிசாக போடுவதை விடுத்து இந்த சோளத்தை பயிரிட்டால் அதிக செலவு இல்லாமலும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் இருக்கும். இதன் காரணமாக இந்த தனியார் ரக சோளம் விளைச்சலில் சக்கை போடுபோடுகிறது.

    ராஜபாளையம் சுற்று வட்டாரங்களில் இந்த ரக சோளத்தை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு பயனடைந்து வருகின்றனர்.

    சந்தையில் இதன் விலை உயர்ந்துள்ளதை விவசாயிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

    Next Story
    ×