search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை கொலைக்கு பழி வாங்கிய 6 பேர் கைது
    X

    தந்தை கொலைக்கு பழி வாங்கிய 6 பேர் கைது

    • வத்திராயிருப்பு அருகே தந்தை கொலைக்கு பழி வாங்கிய மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்தார். பின்பு முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவாக இருந்தார்.

    தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனா புரத்திற்கு முருகன் வந்தார். அவரை கொலையுண்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார்(வயது24),

    பேச்சியப்பன்(27), முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதை சேர்ந்த முத்து(40), சூர்யா(22), பால்பாண்டி(45) ஆகிய 6 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார்.

    மற்ற 5 பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். உடலை மீட்ட போலீசார் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×