என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தந்தை கொலைக்கு பழி வாங்கிய 6 பேர் கைது
- வத்திராயிருப்பு அருகே தந்தை கொலைக்கு பழி வாங்கிய மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
- இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்தார். பின்பு முருகன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வந்தவர் தலைமறைவாக இருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனா புரத்திற்கு முருகன் வந்தார். அவரை கொலையுண்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார்(வயது24),
பேச்சியப்பன்(27), முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதை சேர்ந்த முத்து(40), சூர்யா(22), பால்பாண்டி(45) ஆகிய 6 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார்.
மற்ற 5 பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். உடலை மீட்ட போலீசார் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்