search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் சிக்கினர்
    X

    மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் சிக்கினர்

    • மதுபாட்டில் பதுக்கிய 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
    • அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் உட்கோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து உட்கோட்டபகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் இருந்து 46 மது பாட்டில்களும், ரூ.1580-ம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேசன் என்பவரிடம் இருந்து 8 மது பாட்டில்களும், ரூ.1,360-ம், அத்திகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் இருந்து 26 பாட்டில்களும், ரூ.1660-ம், மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் இருந்து 11 மது பாட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடம் இருந்து 7 மதுபாட்டிலும், கைப்பற்றப்பட்டன. அவர்கள் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×