search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயம்
    X

    2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயம்

    • விருதுநகர் மாவட்டத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • காரியாபட்டி, வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 20). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் கல்யாணி (86). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது மகன் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் விருதுநகர் அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் மாயமானது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×