search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2  வாலிபர்கள் கைது
    X

    கைதான வாலிபர்கள்

    300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

    • பள்ளி பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அஜீஸ் நகரை சேர்ந்த நடராஜ் (22), நேரு மைதான பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×