என் மலர்
உள்ளூர் செய்திகள்

3 வாலிபர்கள் தற்கொலை
- விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 70). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தங்கவேல் மகன் தெய்வ முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு முருக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவருக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ராம மூர்த்தியின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே வி.ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் . இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த காளிமுத்து வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உடலில் டீசலை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் பார்த்திபராஜ் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






