என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்
- என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகள் காவ்யா (வயது 19). இவர் ஆமத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த காவ்யா திடீரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான என்ஜினீயரிங் மாண வியை தேடி வருகின்றனர்.
சின்னகாரியாபட்டி ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் வள்ளிமுத்து (வயது 18). இவர் விருது நகரில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தார். சம்ப வத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற வள்ளி முத்து திடீ ரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் செல் வராஜ் (55). மனநலம் பாதிக் கப்பட்டிருந்த இவர் சம்பவத் தன்று மாயமானார். இது குறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






