search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் வாலிபர் மதுபோதையில் அத்துமீறல்
    X

    வால்பாறையில் வாலிபர் மதுபோதையில் அத்துமீறல்

    • பெண்கள் முன்பு ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றார்
    • பக்கத்தில் வந்தால் குத்தி கொலை செய்வதாக மிரட்டினார்

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 37). கூலி தொ ழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் கையில் கத்தியுடன் வீட்டிற்கு நடந்து செ ன்றார். அப்போது வின்சென்ட் அங்கு நின்று கொண்டு இருந்த பெண்கள் முன்பு ஆடை களை கழற்றி நிர்வாண நிலையில் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டார். இதனை பார்த்த அங்கு இருந்தவர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் ஆத்திரத்தில் அங்கு அங்கு இருந்த தெரு பைப்பை உடைத்து விட்டு தப்பிச் சென்றார்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கை யில் கத்தியுடன் பெண்கள் முன்பு நிர்வா ணமாக நின்ற வின்சென்டை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×