என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை
- விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து மழை வாங்கியது.
- பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார்.
விழுப்புரம்:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் நேற்று இரவு விழுப்புரம் மற்றும் விழுப்பு–ரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி, வானில் கருமயங்கள் சூழ்ந்து, இரவு திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தற்போது பெய்த மழையினால் வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார். பருவநிலை மாற்றத்தின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் மாறி மாறி அடிக்க தொடங்குகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளான வளவனூர் விக்கிரவாண்டி கோலியனூர் கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்