search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thunder lightning"

    • அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • கண்ணடியன் கால்வாய் பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று அம்பை, வி.கே.புரம், மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக அங்குள்ள ஏராளமான குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதில் ஆட்கள் யாரும் இல்லாமல் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக 10 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாநகர பகுதியில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை மணி முத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறு, பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதிகளில் 8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் மதியத்திற்கு பிறகு குளிர்ந்த காற்று வீசிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாஞ்சோலை வனப்பகுதி யில் பலத்த மழை பெய்தது. அங்கு ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பலத்த மழை கொட்டியது. ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்ரும், காக்காச்சி, நாலுமுக்கில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில், மதியம் 2 மணிக்கு பிறகு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. மாலையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக ஆலங்குளம், நெட்டூர், குறிப்பன்குளம், புதுப்பட்டி, கரும்புளியூத்து, மாறாந்தை, மருதம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    சுமார் 1 மணி நேரத்தை கடந்தும் பெய்த கனமழையால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஒரு சில குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    புறநகர் பகுதியான சிவகிரி அருகே தலையனை, கோம்பையாற்று பகுதி மற்றும் ராயகிரி, உள்ளார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    • தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
    • ஒரே நாளில் 114 மி.மீ. கனமழை பதிவானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களா கவே வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் தொடங்கும் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடித்தது.

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்தது.

    இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்தா லும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.தஞ்சையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது.

    மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் இரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்கு ளத்தில் 24.70 மி.மீ. மழை பதிவானது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    குருங்குளம் -24.70,

    பட்டுக்கோட்டை -16,

    தஞ்சாவூர் -14,

    அதிராம்பட்டினம் -13.70,

    வெட்டிக்காடு -13,

    திருக்காட்டுப்பள்ளி -9.

    மாவட்டத்தில் ஒரே நாளில்

    114.60 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

    • விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து மழை வாங்கியது.
    • பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் நேற்று இரவு விழுப்புரம் மற்றும் விழுப்பு–ரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி, வானில் கருமயங்கள் சூழ்ந்து, இரவு திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    தற்போது பெய்த மழையினால் வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார். பருவநிலை மாற்றத்தின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் மாறி மாறி அடிக்க தொடங்குகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளான வளவனூர் விக்கிரவாண்டி கோலியனூர் கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தது.

    சூளகிரி பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது.
    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆங்காங்கே மழையும் பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலினால் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்குவோர் கடும் புழுக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் தெருக்கள் மற்றும் வீட்டு தின்னைகளை நோக்கியே சென்றனர். மேலும், சூளகிரி பகுதி ஏரி, குளங்களில் போதியஅளவு தண்ணீர் இன்றி பல ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கினறுகள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ், சாமுவேல், ரங்கராஜன் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிவந்த நிலையில் நேற்று மாலை சூளகிரி பகுதிகளில் சுமார் மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதில் சூளகிரி, மாரண்டபள்ளி, தியாகரசன பள்ளி, சென்னபள்ளி, பஸ்த்தள பள்ளி, சின்னார் மற்றும் பல பகுதியில் பரவலான மழை பெய்தது. மழையினால் நள்ளிரவு நேரத்தில் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு உள்ள வேப்பமரம் வேரோடு சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களுக்கு எந்தவித விபத்து மற்றும் சேதங்கள் இல்லாமல் இருந்தது.
    சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×