சூளகிரி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை

சூளகிரி பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூளகிரி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை
Published on

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன்கூடிய இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. ஆங்காங்கே மழையும் பெய்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலினால் இரவு நேரங்களில் வீடுகளில் தூங்குவோர் கடும் புழுக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் தெருக்கள் மற்றும் வீட்டு தின்னைகளை நோக்கியே சென்றனர். மேலும், சூளகிரி பகுதி ஏரி, குளங்களில் போதியஅளவு தண்ணீர் இன்றி பல ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கினறுகள் முற்றிலும் வற்றிய நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்பேரில், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ், சாமுவேல், ரங்கராஜன் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிவந்த நிலையில் நேற்று மாலை சூளகிரி பகுதிகளில் சுமார் மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதில் சூளகிரி, மாரண்டபள்ளி, தியாகரசன பள்ளி, சென்னபள்ளி, பஸ்த்தள பள்ளி, சின்னார் மற்றும் பல பகுதியில் பரவலான மழை பெய்தது. மழையினால் நள்ளிரவு நேரத்தில் சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு உள்ள வேப்பமரம் வேரோடு சரிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் பொதுமக்களுக்கு எந்தவித விபத்து மற்றும் சேதங்கள் இல்லாமல் இருந்தது.

சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com