search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை சீரமைக்க கோரி கிராமமக்கள் மறியல்
    X

    போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சாலையை சீரமைக்க கோரி கிராமமக்கள் மறியல்

    • ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி, விசித்திரராஜபுரம் கிராமத்தில் காலனி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட நாட்களாக சீர் செய்ய கோரியும், இந்த சாலையை சீரமைக்க யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை உடன் சீர் செய்ய வேண்டும் எனவும், சாலையில் மேற்புறம் உள்ள ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைத்திட வேண்டும் எனவும் இதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்ககோரி அந்த பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கும்பகோணம்- திருவையாறு நெடுஞ்சாலையில் விசித்திர ராஜபுரம் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர், விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தையில் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×