search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் கிராம விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்
    X

    கூடலூரில் கிராம விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்

    • போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பங்கேற்பு
    • கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மாக்கமூலா பகுதியில் காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு திட்டம் தொடக்க விழா நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து கொண்டு பெயர்ப்ப லகையை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் முதல்முறையாக கிராம விழிப்புணா்வு திட்டம் கூடலூரில் தொடங்கப்பட்டு உள்ளது. இது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், கிராமத்துக்கு ஒரு காவலா் வீதம் நியமிக்கப்படுவா்.

    அந்த காவலரை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடா்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதன்மூலம் கிராமத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றார்.

    தொடா்ந்து கூடலூா், மசினகுடி, ஸ்ரீமதுரை, ஓவேலி, தேவா்சோலை, நடுவட்டம் ஆகிய பகுதிகளுக்கு கிராம விழிப்புணா்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு உள்ள காவலரின் பெயா், கைப்பேசி எண் அடங்கிய அறிவிப்புப் பலகையை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், கூடலூா் டி.எஸ்.பி. செல்வராஜ், பந்தலூா் டி.எஸ்.பி. செந்தில்குமாா் உள்பட பலர் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×