என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இமாச்சல் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி புத்துணர்ச்சி அளிக்கிறது - விஜய் வசந்த் எம்.பி.
- இமாச்சல் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.
- ஆளும் கட்சியான பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது.
கன்னியாகுமரி:
இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அசத்தியது.
இதுதொடர்பாக விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றி நமது கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த வெற்றி முதல் படி. இந்த வெற்றிக்காக உழைத்த இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த வெற்றியின் உழைப்புக்கு உத்வேகம் அளித்த அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருமதி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்