என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி
    X

    வக்ஃபு மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி

    • காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்திய கூட்டணி கட்சிகள் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்.
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினேன்.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தான் பங்கேற்ற நிகழ்ச்சகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மூலம் இஸ்லாமிய சமூகத்தை வஞ்சித்த மத்திய அரசுக்கு எதிராக, நேற்று தமிழகம் வந்த நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்திய கூட்டணி கட்சிகள் நேற்று நாகர்கோவிலில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிருக்குக்கான பேச்சுப்போட்டி திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினேன்.

    இந்தியாவின் மிக பழமை வாய்ந்த நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி 132 வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×