என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதிசாரம் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி - அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி.
    X

    அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த் எம்.பி.

    திருப்பதிசாரம் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி - அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த் எம்.பி.

    • கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியினைக் கட்ட அடிக்கல் நாட்டினார்
    • இத்திட்டத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் குடிநீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றினை கட்டி தரும்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டியினைக் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டினார்

    இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சீனிவாசன், வட்டார தலைவர் முருகானந்தம், வட்டார பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, வர்த்தக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் முருகேசன், திருப்பதிசாரம் ஊராட்சி தலைவர் சிந்துமதி, வார்டு உறுப்பினர் முகிலா, தோவாளை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் கனகப்பன், செண்பகராமன்புதூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் நிலாமணி, தாழக்குடி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் டேவிட்சிங், ஆரல்வாய்மொழி பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் நேசமணி, பீமநேரி ஊராட்சி காங்கிரஸ் தலைவர் முத்துமணி, சிறுபான்மை பிரிவு தலைவர் முகைதீன் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×