search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை அருகே செல்லப்பன்பேட்டையில் நாளை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
    X

    தஞ்சை அருகே செல்லப்பன்பேட்டையில் நாளை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

    • மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    • பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைக்கிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைக்கிறார். இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் சிறப்பு மகப்பேறியியல் மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் கால்நடைகளுக்கு தாது உப்புக்களும், சிறந்த கன்று பராமரிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே இக்கிராம மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து முகாமில் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×