search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    கால்நடை மருத்துவ முகாம்

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் மலடு நீக்கசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    • முகாமில் 1465 கால்நடைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் திருப்புக லூரில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை (ஆவின்) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா, கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    கால்நடை கண்காட்சி யினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் துவக்கி வைத்தார்.

    சிறந்த கால்நடை வளர்போருக்கான பரிசுகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டு கழகம் தலைவர் உ.மதிவாணன்,

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

    கால்நடை வளர்போருக்கான இடுபொருள் வழங்கி முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ,வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டு வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக ஆவின் பொது மேலாளர் சத்யா வரவேற்றார்.

    இம்முகாமில் சுமார் 186 கால்நடை வளர்ப்போர்,443 பசுக்கள்,658 ஆடுகள், கோழிகள் 254 நாய்களுக்கு தடுப்பூசி,குடற்புழு நீக்கம்,செயற்கை முறை கருவூட்டல் 31,சிகிச்சை 206,ஆண்மை நீக்கம் 14, தாது உப்புக்கலவை வழங்குதல் 175 கிலோ ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சினைப்பரி சோதனை மற்றும் மலடுநீக்க சிகிச்சை நவீன கருவி உதவியுடன் மேற்கொள்ள ப்பட்டது.

    முகாமில் 1465 கால்நடைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    கால்நடை கண்காட்சியில் பல்வேறு தீவன பயிர்கள் பயன்பாடு மற்றும் முக்கியத்து வம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் சினை பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோ தனைகள் மேற்கொள்ள ப்பட்டது.

    ஆவின் நிறுவனத்தின் மூலம் பால், மதிப்பு கூட்ட ப்பட்ட பொருட்கள் விற்ப னையகம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சிக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக உதவி பேராசிரியர் மூலம் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இம்முகாமில் உதவி இயக்குநர் அசன் இப்ராகிம் மற்றும் வேதாரண்யம் கால்நடை மருத்துவர் கணேசன்,திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் முத்துக்குமார், ஆகியோர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்,

    ஆவின் கால்நடை மருத்துவர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்

    Next Story
    ×