search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
    X

    இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

    • 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி அடுத்த பரதராமி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவரும் மாலியப்பட்டை சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெங்கடேசன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து உள்ளார். இதனால் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார். ஆனால் இளம்பெண்ணை வெங்கடேசன் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசனுக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் இடையே திருமணம் நடந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய வெங்கடேசன் மீது காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×