என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
    X

    மின்கசிவு ஏற்பட்ட ஒயர். பலியான நடேசன்.

    மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

    • கொய்யா பறிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், நடேசன் நேற்று கத்தாரிகுப்பம் அருகே அம்மனூர் கிராமத்தில் கொய்யா தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார்.

    அப்போது, தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாருக்கு செல்லும் ஒயரை மிதித்து உள்ளார்.

    அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து நடேசன் தூக்கி வீசப்பட்டார். மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளி அவரது வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விரைந்து வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் நடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், நடேசன் மகன் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×