என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
- விளக்குகள் இல்லாமல் இருளில் கிடக்கும் சர்வீஸ் சாலை
- பைக்கில் செல்பவர்கள் அவதி
வேலுார்:
வேலூரில் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வியாபாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாகனங்கள் வந்து செல்வதில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
வேலுாரில் இருந்து காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் (4 வீலர், 2 வீலர்) கிரீன் சர்க்கிள் சாலையில் செல் வதை தவிர்த்து, நேஷனல் தியேட்டர் சர்க்கிள் அருகில் இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சா லையை அடைந்து, சேண் பாக்கம், ெரயில்வே மேம்பாலத்தின் அடியில் திரும்பி புது பஸ் ஸ்டாண்டு வழி்யாக காட்பாடி, சென்னை மார்க்கமாக செல்ல வேண்டும்.
சென்னை மார்க்கமாக புது பஸ் ஸ்டாண்டு வரும் வாகனங்கள், காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நுழை வதை தவிர்த்து கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள சர்வீஸ் லைனில் நுழைந்து, சேண்பாக்கம் ெரயில்வே மேம்பா லத்தின் கீழ் திரும்பி புது பஸ் ஸ்டாண்டு வந்து காட்பாடி வழியாக செல்ல வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.
அன்று முதல் அந்த வழியாகத்தான் வாகனங் கள் சென்று வருகின்றன. ஆனால், அங்குள்ள பெட்ரோல் பங்கைத் தா ண்டி சென்றால் போதுமான வெளிச்சம் இல்லை. அங்கு மின் விளக்கு வசதிகள் இல்லாமல் இருட்டாக இருக்கிறது.
ெரயில்வே மேம் பால பகுதி, ஆட்கள் நட மாட்டம் இல்லாமல் குடி மகன்களின் கூடாரமாக இருந்தது. இப்போதும் அந்நிலைமை நீடிக்கிறது.
அந்த வழியாகத்தான் இப்போது வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கும் போதுமான விளக்கு வெளிச்சத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது.
குறிப்பாக பைக்குகளில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அங்கு உடனடியாக போது மான அளவுக்கு விளக்கு வசதிகள் மேற்கொள்ள வேண்டும், போலீஸ் ரோந்து அங்கு அடிக்கடி நடத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






