என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை
- கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் ரூபினி என்கிற லட்சுமி (வயது 22) இவருக்கும் ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூபினி கணவனைப் பிரிந்து கேசவபுரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த ரூபினியை வேலை எதுவும் செய்யவில்லை என அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரூபினி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரூபினி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






