search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சி முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வேலூர் மாநகராட்சி முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

    • அடிப்படை வசதி செய்து தரக்கோரி நடத்தினர்
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி, கே.கே.நகர், பாரதியார் தெரு, பாலமுருகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கால்வாய் வசதி கேட்டு மனு அளிக்க இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

    மேயர் மற்றும் கமிஷனரிடம் மனு அளிக்க நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வர தாமதமானது இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.

    மேலும் அவர்களை மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    அதிகாரியிடம் கே.கே.நகர் பகுதி மக்கள் அளித்தமனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளும் இல்லை.

    கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×