என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடியில் வட மாநில வாலிபர் கொலை
    X

    காட்பாடியில் வட மாநில வாலிபர் கொலை

    • முன் விரோதம் ஏதும் இருந்ததா? விசாரணை
    • செல்போன் மூலம் துப்பு துலக்கப்படுகிறது

    வேலூர்:

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபனிஷன்னி (வயது 34), கூலித்தொழிலாளி.

    இவர், காட்பாடி காந்திநகர் பகுதியில் கடந்த 22-ந் தேதி இரவு கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ரத்தவெள்ளத் தில் கிடந்தார். தகவலறிந்த விருதம்பட்டு போலீ சார் அங்கு சென்று, உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனை யில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    வட மாநில வாலிபர் சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் வாலிபருக்கு முன் விரோதம் ஏதும் இருந்ததா என விசாரித்தனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபருடன் செல் போனில் அடிக்கடி பேசியது யார் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×