என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    11 மையங்களில் நாளை நீட் தேர்வு
    X

    11 மையங்களில் நாளை நீட் தேர்வு

    • 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன
    • தகவல் எலக்ட்ரானிக் சாதனம் சார்ந்த பொருட்களுக்கு அனுமதி இல்லை

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 11 மையங்களில் 6,883 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

    இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) நாளை நடைபெற உள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 6,883 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

    அவர்கள் தேர்வு எழுதவற்கு வேலூர் சாய்நாதபுரம் வி.வி.என்.கே.எம். சீனியர் செகன்டரிபள்ளி, டி.கே.எம். மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீபுரம் நாராயணி சீனியர் செகண்டரி பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் கல்லூரி, ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல்பள்ளி, சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி ஆகிய 11 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். பிற்பகல் 1.30 மணிக்குள் மாணவர்கள் மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின்னர் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. மாணவ-மாணவிகள் முழுபரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வுக்கான நுழைவு சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    தேர்வு மையங்களுக்கு சென்று வர வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தேர்வு மையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அனுமதி அட்டை (அட்மிட் கார்டு) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் செல்லுபடியாகும் அசல் அடையாளச் சான்று மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் (பொருத்தினால்) முகமூடி, சானிடைசர், கையுறைகள் மற்றும் டிரான்ஸ்பரண்ட் தண்ணீர்பாட்டில் எடுத்து செல்லலாம்.

    செல்போன், புளூடூத், இயர்போன்கள், மைக்ரோபோன்கள், போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு சாதனமும், ஆபரணங்கள் கைக்கடிகாரம், வளையல் கேமரா போன்றவை மற்றும் எழுது பொருட்கள் தகவல் எலக்ட்ரானிக் சாதனம், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள், எந்த உணவுபொருளும் திறக்கப்பட்டது அல்லது பேக் செய்யப்பட்டது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

    Next Story
    ×