search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் கத்தியை காட்டி பணம் பறிப்பு
    X

    வேலூரில் கத்தியை காட்டி பணம் பறிப்பு

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 52 ) . இவர் சிட்டிங் பஜார் பகுதியில் நடந்து சென்று கொண் டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமேஷின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார் . இதுகுறித்து ரமேஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய் தார் .

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது சலவன் பேட்டையை சேர்ந்த ரகுநாதன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×