என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை
    X

    தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை

    • ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்
    • வேலூர் கலெக்டர் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தி லுள்ள குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதி களை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

    தவறினால் விடுதி, இல்லங்களின் உரிமையா ளர்களுக்கு ரூ.50,000 வரை அபராத மும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூயிருப்பதாவது :-

    வேலூர் மாவட்டத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித்துறை, பிற் படுத்தப்பட்டோர் நலத் துறை, தொழிலக பாதுகாப்பு சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந் தைகள், பெண்களுக்கான விடு திகளை தமிழ்நாடு சிறார், மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014 இன்படி பதிவு செய்தல் வேண்டும்.

    இந்த விடுதிகளை http//tnswp.com single window portal என்ற இணையதளம் மூலம் அனைத்து சான்றிதழ்க ளுடன் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், 18 வயதுக்கு மேற் பட்ட பெண்கள் தங்கும் உரி மம் பெற சமூக நலன், மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல் படும் மாவட்ட சமூக நல அலு வலகத்தையும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு, தனியார் பள் ளிகளின் விடுதிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலகத்தையும், மனநலம் பாதிக் கப்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதிகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலு வலகத்தையும் அணுகி அதற் கான கருத்துருக்களை சமர்ப் பிக்க வேண்டும்.

    ஆங்காங்கே கல்வி நிறுவனங்களைச் சுற்றி குடியிருப்புப் பகுதி களில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் எவ்வித அனுமதியுமின்றி மாணவ, மாணவிகள் விடுதிகள் தனியாரால் நடத்தப்பட்டு வருவது தெரியவருகிறது.

    அவ்வாறு அனுமதியின்றி தங் கும் விடுதிகள் நடத்தி வருவோரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதி மற்றும் இல்லங்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு ரூ.50,000 வரை அபராதமும், 2 ஆண்டு கள் வரை சிறை தண்டனை யும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×