search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியிடம் ரூ‌.2 ஆயிரம் பறிப்பு
    X

    தொழிலாளியிடம் ரூ‌.2 ஆயிரம் பறிப்பு

    • பீர்பாட்டிலால் தாக்கி துணிகரம்
    • 2 பேர் கைது

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 29) கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர் மோகன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு காட்பாடி செங்குட்டையிலிருந்து பள்ளி குப்பத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். செங்கோட்டை பகுதியை ஒட்டி உள்ள மைதானம் அருகே சென்ற போது 3 பேர் அவர்களை மடக்கினர்.

    அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நந்தகுமாரிடம் பணம் கேட்டனர். அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். அவரது செல்போனை பிடுங்கினர். அதனை பரிசோதித்த கும்பல் செல்போனில் ஜிபே உபயோக படுத்துவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த செல்போனில் இருந்து நந்தகுமாரை மிரட்டி ரூ.2 ஆயிரத்தை அவர்களது ஜிபே எண்ணுக்கு மாற்ற செய்தனர்.

    அவர்களது அக்கவுண்டுக்கு பணம் வந்த பிறகும் நந்தகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நந்தகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.2000 பரிமாற்றம் செய்யப்பட்ட செல்போன் ஜிபே எண் மூலம் துப்புத் துலக்கினர்.

    இதில் அந்த எண் செங்குட்டையை சேர்ந்த பிரவீன் (28) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் பிரவீனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் பிரவீன் அவரது நண்பர் கவுதம் (26) மற்றும் ஜேக்கப் ஆகியோருடன் சேர்ந்து நந்தகுமாரை தாக்கி ஜிபே மூலம் பணம் பறித்தது தெரியவந்தது.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் கவுதமை கைது செய்தனர். ஜேக்கப்பை தேடி வருகின்றனர்.

    தொழிலாளியை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×