என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருஷ்டி கழிப்பதாக கூறி வட மாநில பெண்ணிடம் பணம் பறிப்பு
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலத்தவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்கள் காந்தி ரோடு ஆற்காடு ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.
தினந்தோறும் விடுதிகளில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அவர்களை மடக்கி திருநங்கைகள் சிலர் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துளசிதாஸ் அவருடைய பேத்தி பாயில்தாஸ் (வயது 21) ஆகியோர் இன்று காலை காந்தி ரோட்டில் பொருட்கள் வாங்க நடந்து சென்றனர்.
அவர்களை 5 பேர் கொண்ட திருநங்கைகள் வழிமடக்கி எலுமிச்சம் பழம் கொண்டு திருஷ்டி கழிப்பதாக தெரிவித்துள்ளனர். அவருடைய கைப்பை, மணிபர்ஸ் போன்றவற்றை தடவி உள்ளனர்.
அப்போது பாயில்தாஸ் வைத்திருந்த ரூ.1,000-தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பாயில்தாஸ் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் காந்தி ரோடு பகுதியில் பணம் பறிக்கும் கும்பலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்