என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்
    X

    வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்

    • ஒட்டுமொத்த கொசு ஒழிப்பு பணி தீவிரம்
    • தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் ஒட்டுமொத்த டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து சுகாதார அலுவலர் லூர்த்துசாமி தலைமையில் அலமேலுமங்காபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக அங்கு 75 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் சென்று அபேட் கரைசல் தெளிக்க வேண்டும். மேலும் வீடுகளில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.

    கடந்த இரண்டு நாட்களாகவிட்டு விட்டு மழை பெய்து வருவதால் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×