என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • ரூ.6 ஆயிரம் பென்ஷன் வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் திருச்செல்வன் பேசினார்.

    மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் காசி, உதவி பொதுச் செயலாளர் சரவணன், உள்பட பலர் பங்கேற்றனர்.

    பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டும், பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6000 வழங்க வேண்டும். பீடி மீது விதித்துள்ள 28 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    Next Story
    ×