என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைகிராமங்களில் கூடுதலாக பள்ளி மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு
    X

    மலைகிராமங்களில் கூடுதலாக பள்ளி மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு

    • பொதுமக்கள், மாணவர்களுக்கு தென்னங்கன்று வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்க்குட்பட்ட பீஞ்சமந்தை அடுத்த ஜார்தான்கொல்லை, மலை ஊராட்சியில் குண்டுராணி அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இதில் குறைவான பள்ளி மாணவர்களே இருப்பதாலும் மேலும் சில மாணவர்கள் இடை நின்றதாலும் பள்ளிமானவர்களை திரும்ப சேர்க்க பள்ளிவளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சமந்தை, ஜாத்தான் கொள்ளை, பலாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கூடுதலாக பள்ளி மாணவர்களை சேர்க்க குண்டுராணி அரசு தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    விழாவில் குண்டு ராணிஅரசு தொடக்கப் பகுதிபள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார். இதில் ஜார்தான்கொள்ள ஊராட்சிமன்ற தலைவர் லதாராஜசேகர், மற்றும் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் கடந்த ஆண்டில் அரசு பள்ளியில் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்க்கை இருந்த நிலையில் நடப்பாண்டில் தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா அவர்கள் முயற்சியால் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள் என தொடர்ச்சியாக வலியுறுத்தியதை தொடர்ந்து, மலைகிராமங்களில் இதுவரை பள்ளிக்கு செல்லாமல் மற்றும் இடைநின்ற பள்ளி மாணவர்களை 57 பேர் புதிதாக பள்ளியில் சேர்த்துள்ளார்.

    மேலும் இதுபோல மலை கிராமங்களில் உள்ள பள்ளிக்கு செல்லாமல் மற்றும் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் விதமாக பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட தென்னங்கன்றுகள், விளையாட்டு உபகரணங்கள், மாணவர்களுக்கு எழுதுகோல், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது.

    இதில் ஊரிஸ் கல்லூரி பாதுகாப்புகள் துறை தலைவர் திருமாறன் கலந்துக்கொண்டு மலை கிராமங்களில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து தொடர்ச்சியாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்தி பேசினார்.

    மேலும் இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பணியாற்றும் ஊழியர்கள், பெற்றோர்கள் என 100 பேருக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×