என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொம்மை வேடத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
    X

    பொம்மை வேடத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

    • வேலூர் வாலிபருக்கு எஸ்.பி.பாராட்டு
    • செல்போன், ஆடை, ஆபரணம் ஆபத்தாகிவிடக் கூடாது என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் ஆல்பர்ட் வினோத் (வயது32). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவர் பெண்கள் பாதுகாப்பு குறித்து பொம்மை (மிக்கி மவுஸ்) வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இதனை தொடங்கி வைத்து ஆல்பர்ட் வினோத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பெண் குழந்தைகளுக்கு நல்லவை தீயவை குறித்து தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    செல்போன் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம்முடைய தேவைகளை அடுத்தவர்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள்.

    ஆடை ஆபரணம் அழகிற்காக மட்டுமே அணிய வேண்டும்.அது நமக்கு ஆபத்தாகி விடக்கூடாது. கியாஸ் மின்சார பொருட்களை உபயோ கிக்கும் போது செல்போன் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை எண்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளிடம் செல்போன்களை அதிகம் வழங்கக் கூடாது.

    வெளிநாட்டு உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய உணவு குழந்தைகளுக்கு நல்ல உடல் வலிமையும் அறிவையும் வளர்க்கும். சாலைகளில் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.

    வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இளைஞர்கள் வாகன ங்களில் சாகசம் செய்ய வேண்டாம். மது குடித்துவிட்டு செல்போன் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என அவர் பயணிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×