என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமிர்தி நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- மலை கிராமங்கள் துண்டிப்பு
- 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது
வேலூர்:
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.
அமிர்தி நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருககாட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலும் முழுவதுமாக மூழ்கியுள்ளது.
தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை குக் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.தற்போதைக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை.






