search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை
    X

    குழந்தையை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை

    • கணவருடன் தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் கேசவபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). இவருடைய மனைவி சந்தியா (27) தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    மணிவண்ணன் வேலூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் கீர்த்திகா (2) சில மாதங்களுக்கு முன்பு மணிவண்ணன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

    இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் தகராறு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து மணிவண்ணன் வெளியே சென்று விட்டார். அவரது பெற்றோரும் நிலத்திற்கு சென்றிருந்தனர். அந்த நேரத்தில் சந்தியா அவரது மகள் கீர்த்திகாவை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரும் தூக்கில் தொங்கினார்.

    வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மணிவண்ணன் குழந்தை பிணமாக வும், மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். சந்தியாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேலூர் தாலுகா போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    மணிவண்ணனின் தங்கை அதே பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சந்தியாவிற்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக சந்தியா மணிவண்ணன் தம்பதிய இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த சந்தியா 2 வயது மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×